Wednesday, January 22, 2020

ஞாபகக் கீறல்கள்

மறந்து போன  முகங்களை
தேடிப்  போன தருணங்களில்
மறைந்து நின்று பார்ப்பதிலும்
மனம்  உறைந்துதான்  போகிறது ;

சந்தோஷ நிமிடங்கள்
சலிப்பைத் தருகையில்,
அழுது தீர்த்த வினாடிகளோ
அழுகையே தந்தன.

தண்டிக்கப்படாத தவறுகள்
தவறுவதில்லை
ஞாபகப்படுத்தி நம்மை
நாணப்படுத்துவதை.

மறதி கொண்ட மனிதர்கள்
மகிழ்ச்சியானவர்களே;
குருதியுறையும்
ஞாபகக் கீறல்கள் முன்னே
உறுதிகொண்டவர் யாரோ?

கடந்து போன காலமும்
வலிகளைத் தர மறப்பதில்லை.
காலம்  மருந்தாவது காலமும் நடவாதது ...
உள்நிறைந்த காற்றும் கனக்கிறது
 நெஞ்சம் கனக்கையில்...

No comments:

Post a Comment